முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் ஒரே நாளில் 1,473 பேருக்கு கரோனா: மேலும் 8 பேர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் தெலங்கானாவில் புதிதாக 1,473 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாநில சுகாதாரத் துறை திங்களன்று தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:01 PM
Telangana reports 1,473 new COVID-19 cases, 8 deaths
பகிர்:

கடந்த 24 மணி நேரத்தில் தெலங்கானாவில் புதிதாக 1,473 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், 8 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து, 774 பேர் குணமடைந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை திங்களன்று தெரிவித்துள்ளது.

புதிதாக 1,473 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 55,532 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் 42,106 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 12,955 பேர் தற்போது மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். 

மேலும், அந்த மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு மொத்தம் 471 பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரம் பேருக்கு இதுவரை கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனா பாதிப்பு 14 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 4,85,114 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். 9,17,568 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். தொற்று பாதித்து சிகிச்சை பலனின்றி 32,771 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.