இந்தியா

தெலங்கானாவில் 65% கரோனா நோயாளிகள் 21 - 50 வயதுக்குட்பட்டவர்கள்

IANS


ஹைதராபாத்: தெலங்கானாவில் கரோனா தொற்றுக்கு உள்ளானவக்ரளில் 65% கரோனா நோயாளிகள் 21 - 50 வயதுக்குட்பட்டவர்கள் என்று மாநில அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 65.7% பேர் 21 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், 50 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருப்பதாகவும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 10 வயதுக்குக் குறைவானவர்களுக்கும் தான் கரோனாவின் தாக்கம் கடுமையாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 65 சதவீதம் பேரில் 21 - 40 வயதுக்குட்பட்டவர்களே 47 சதவீதம் பேர் என்றும், 41 - 50 வயதுக்குட்பட்டவர்கள் 18% பேர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல், தெலங்கான உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு தாக்கல் செய்த விளக்கமான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இளைய வயதினரும் கரோனா பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு அதிகம் இருப்பது குறித்து மாநில அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

SCROLL FOR NEXT