தில்லியில் ஒரேநாளில் 1,513 பேருக்கு கரோனா தொற்று
தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,513 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,513 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவலை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 1,513 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 9 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 23,645 ஆக உயர்ந்துள்ளது. இதில் 13,497 பேர் சிகிச்சையில் உள்ளனர். 606 பேர் பலியாகியுள்ளனர்.
இன்று மட்டும் 299 பேர் குணமடைந்ததையடுத்து, மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 9,542 ஆக உயர்ந்துள்ளது.