முகப்பு
இந்தியா

தாராவியில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று

தாராவியில் இன்று (வியாழக்கிழமை) மேலும் 23 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:44 PM
பகிர்:


தாராவியில் இன்று (வியாழக்கிழமை) மேலும் 23 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 123 பேர் பலியாகியுள்ளனர். ஒரு நாளில் அதிகம் பலியாவோரில் இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும். புதிதாக 2,933 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 77,793 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 2,710 பேர் பலியாகியுள்ளனர்.

மும்பை:

மும்பையில் புதிதாக 1,442 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 48 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மும்பையில் மட்டும் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 44,704 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 1,465 ஆக உள்ளது.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 23 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,872 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாரும் பலியாகாததால், பலி எண்ணிக்கை 71 ஆக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →