முகப்பு
இந்தியா

ஒடிசாவில் கரோனா பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

ஒடிசா மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 

Updated On : 5 ஜூன், 2020 at 12:03 PM
பகிர்:

ஒடிசா மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 

கோர்த் மாவட்டத்தைச் சேர்ந்த 63 வயது முதியவர் கரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளார். இவர் ஏற்கெனவே நீரிழிவு மற்றும் பிற நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். 

ஒடிசாவில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி மேலும் 130 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 2,608 ஆக உயர்ந்துள்ளது. மொத்த வழக்குகளில் தனிமைப்படுத்தலிலிருந்து 124 பேரில் ஆறு பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. 

Advertisement

இந்த மாநிலத்தில் 1,481 பேர் இதுவரை நோயிலிருந்து மீண்டுள்ள நிலையில், 1,117 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.