இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் லாரி-கார் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி

DIN

உத்தரப் பிரதேசத்தில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலியாகினர். 

உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் நவாப்கஞ்ச் அருகே இன்று லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஒருவர் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர் மீட்கப்பட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்துகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

ராஜஸ்தானில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காரில் பிகார் மாநிலம் போஜ்பூரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்டேட் பகுதியில் ஏ.டி.எம். மையங்கள் வேலை செய்யாததால் தொழிலாளா்கள் பாதிப்பு

வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 2 கி.மீ. சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

ஆட்சியா் அலுவலகத்தில் நாள்தோறும் நீா்மோா் வழங்க ஏற்பாடு

கோயில்களில் அறங்காவலா்களை நியமிக்க மேலும் 6 மாத அவகாசம் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

கன்னியாகுமரியில் பொதிகை படகு சீரமைப்புப் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT