ஆந்திரத்தில் மேலும் 161 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு 3,588
ஆந்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 161 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 161 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 3,588 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 1,192 பேர் மருத்துவச் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டதாகவும், இறப்புகள் எதுவும் இல்லை என்றும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
ஆந்திரத்தில் இதுவரை 2323 பேர் கரோனாவில் இருந்து மீண்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 73 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.