முகப்பு
இந்தியா

கருப்புச் சந்தையில் மருத்துவமனை படுக்கை வசதி:  எச்சரிக்கும் அரவிந்த் கேஜரிவால்

கருப்புச் சந்தையில் மருத்துவமனையின் படுக்கை வசதிகள் ஒதுக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் எச்சரித்துள்ளார்.

Updated On : 6 ஜூன், 2020 at 3:18 PM
பகிர்:


கருப்புச் சந்தையில் மருத்துவமனையின் படுக்கை வசதிகள் ஒதுக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் எச்சரித்துள்ளார்.

புது தில்லியில் தனியார் மருத்துவமனையில் படுக்கை வசதிகள் பொதுமக்களுக்கு கிடைப்பதில் ஏற்படும் சிரமங்கள் குறித்து இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை வசதிகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செல்லிடப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

படுக்கை வசதிகள் காலியாக இருந்தாலும் சில தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்க மறுக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன. 

அதே சமயம், கருப்புச் சந்தை மூலமாக ஏதேனும் ஒரு குறுக்கு வழியில் மருத்துவமனையில் படுக்கை வசதியைப் பெற முயற்சிப்பவர்களை மன்னிக்க முடியாது என்றும் அரவிந்த் கேஜரிவால் எச்சரித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.