இந்தியா

ஒடிசாவில் 2,781ஐ எட்டியது கரோனா பாதிப்பு: புதிதாக 173 பேருக்குத் தொற்று

PTI

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 173 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், நாளுக்கு நாள் பாதிப்பும், பலியும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 

அந்தவகையில், ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 173 பேருக்குத் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 2,781 ஆக அதிகரித்துள்ளது. 

கரோனா பாதிக்கப்பட்ட 1,167 பேர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். மேலும், 1,604 பேர் இந்த நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை இந்த மாநிலத்தில் கரோனாவுக்கு 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT