மகாராஷ்டிரத்தில் 2,560 காவலர்களுக்கு கரோனா தொற்று, 33 பேர் பலி
மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் 33 காவலர்கள் பலியாகியிருப்பதாக காவல் அலுவலர் ஒருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.
மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் 33 காவலர்கள் பலியாகியிருப்பதாக காவல் அலுவலர் ஒருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகிய மாநிலம் மகாராஷ்டிரம். அங்கு கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் காவல் துறையினரும், கரோனா தொற்றுக்கு அதிகளவில் ஆளாகின்றனர்.
இதுபற்றி காவல் அலுவலர் ஒருவர் தெரிவித்ததாவது:
மகாராஷ்டிரத்தில், காவல் அலுவலர்கள் உள்பட 33 காவலர்கள் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியாகியுள்ளனர். இதில் 18 பேர் மும்பை காவல் படையைச் சேர்ந்தவர்கள். இதுவரை 2,562 காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், 196 காவல் அலுவலர்கள் உள்பட மொத்தம் 1,497 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
பொது முடக்கத்தின்போது 260 காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதற்காக 841 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்களில் 86 பாதுகாப்புப் படையினர் காயமடைந்துள்ளனர். இதுதவிர்த்து 45 சுகாதாரப் பணியாளர்களும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.