ஜம்மு காஷ்மீரில் காங்கிரசைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் காங்கிரசைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அனந்த்நாக்: ஜம்மு காஷ்மீரில் காங்கிரசைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் லோக்பவான் பகுதியைச் சேர்ந்தவர் அஜய் பண்டிட். இவர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பஞ்சாயத்துத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அஜய் பண்டிட் திங்களன்று அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, லோக்பவான் பகுதியின் பிரதான சாலையில் திங்கள் மாலை மணியளவில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளால் அஜய் பண்டிட் சரமாரியாக சுடப்பட்டுள்ளார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.