இந்தியா

ஒடிசாவில் பயிற்சி விமான விபத்து: தமிழகத்தைச் சேர்ந்தவர் உட்பட இருவர் பலி

ஒடிசாவில் பயிற்சி விமான விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி உட்பட இருவர் பலியானார்கள்.

DIN

ஒடிசாவில் பயிற்சி விமான விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி உட்பட இருவர் பலியானார்கள்.

ஒடிசா மாநிலம், தேன்கனல் மாவட்டத்தில் கங்காதஹாத் பகுதியில் பயிற்சி விமானத்தில் கேப்டன் சஞ்சீப் குமார் உட்பட இருவர் இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டுகொண்டிருந்தனர். அப்போது அந்த விமானம் எதிர்பாரதவிதமாக திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. 

இதில் தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி அனீஸ் பாத்திமா மற்றும் பிகாரைச் சேர்ந்த கேப்டன் சஞ்சீப் குமார் ஆகியோர் பலியானார்கள். இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் விமான விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோட்ச தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு: பாஜகவினா் சாலை மறியல்! 12 போ் கைது!

2027-இல் ஜொ்மனியை இந்தியா விஞ்சிவிடும்: சிந்தியா

முட்டைகளில் புற்றுநோய் அபாயம் இல்லை; சாப்பிட உகந்தவை!

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 880 பேருக்கு பணி நியமன ஆணை

தனுஷ்கோடி வரை நான்கு வழிச் சாலை: ராமநாதபுரம் எம்.பி. வலியுறுத்தல்

SCROLL FOR NEXT