இந்தியா

புத்தடியில் இன்று ஏலக்காய் வர்த்தகம் ரத்து

DIN

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திலுள்ள புத்தடியில் இன்று(வியாழக்கிழமை) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நறுமணப் பொருள் வாரியம் சார்பில் இடுக்கி மாவட்டத்திலுள்ள புத்தடி, தேனி மாவட்டம் போடி ஆகிய இடங்களில் தனியார் ஏல நிறுவனங்கள் மூலம் ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம் நடைபெறும்.

போடியில், சி.பி.எம்.சி., ஏல நிறுவனம் மூலம் புதன்கிழமை நடைபெற்ற ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகத்தில், மொத்தம் 52.91 டன் ஏலக்காய் விற்பனைக்கு பதிவு செய்யப்பட்டது. 

இதில், சராசரி தரம் கிலோ ரூ.1,658.31-க்கும், உயர் தரம் கிலோ ரூ.2,377க்கும் விற்பனையானது. 

இந்த நிலையில், இன்று(வியாழக்கிழமை), புத்தடியில் சி.பி.ஏ., ஏல நிறுவனம் சார்பில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஏலக்காய் வர்த்தகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் போக்குவரத்து பிரச்னைகள் காரணமாக வர்த்தகம் ரத்து செய்யப்படுவதாக சி.பி.ஏ., ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT