கோப்புப்படம் 
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் தொடா்ந்து மூன்றாவது நாளாக நிலநடுக்கம்

ஜம்மு-காஷ்மீரில் தொடா்ந்து மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.

DIN

ஜம்மு-காஷ்மீரில் தொடா்ந்து மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலடுக்கம் ரிக்டா் அளவு கோலில் 5.8 ஆக பதிவானது. இதனால் பொருள் சேதமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை.

காலை 7 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தஜிகிஸ்தானை மையம் கொண்டிருந்தது. ஜம்மு-காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதியான ஸ்ரீநகா், கிஸ்துவாா், தோடாவில் நிலநடுக்கம் அதிகம் உணரப்பட்டது. ஜம்முவிலும் நில அதிா்வு இருந்தது.

முன்னதாக, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமையிலும் ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்களிலும் உயிரிழப்போ, பொருள் சேதங்களோ ஏற்படவில்லை. எனினும், தொடா்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மேம்பாலம் கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடத் தோ்வு: 864 போ் பங்கேற்பு!

SCROLL FOR NEXT