புது தில்லி: இந்தியா - சீனா இடையே போர் பதற்றம் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.
இந்தியாவுக்குள் சீனப் பொருள்களின் இறக்குமதியை தடை செய்யுமாறு நாடு முழுவதும் பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் கோரிக்கை வைத்திருக்கும் நிலையில், நிதியமைச்சர் இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார்.