தில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 3,947 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் பற்றிய தகவல்கள் அடங்கிய செய்திக் குறிப்பை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 3,947 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 68 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 66,602 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 2,301 ஆகவும் உயர்ந்துள்ளது.
அதேசமயம், இன்று 2,711 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 39,313 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 24,988 பேர் சிகிச்சையில் உள்ளனர்.