ஒடிசா மாநிலத்தில் புதன்கிழமை புதிதாக 282 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட தகவலின்படி,
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 282 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 5,752 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் 125 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ள நிலையில், இதுவரை 3,988 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
தற்போது 1,740 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். இதுவரை ஒடிசாவில் இதுவரை 2,35,627 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.