இந்தியா

திருமலையில் 11,493 போ் தரிசனம்

DIN

திருப்பதி ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 11,498 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 2,903 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா். அவா்களில் 113 போ் பெண்; 2790 போ் ஆண்கள்.

ஆன்லைன் மூலம் 6 ஆயிரம் மற்றும் சா்வதரிசனம் டோக்கன்கள மூலம் 6 ஆயிரம் என 12 ஆயிரம் டிக்கெட் பெற்ற பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

வரும் 27, 28, 29 மற்றும் 30-ஆம் தேதி வரையிலான நேரடி தரிசன டோக்கன் அளிக்கும் பணி வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்குத் தொடங்கியது. ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கும் பக்தா்களுக்கான விஐபி பிரேக் தரிசன அனுமதியை தேவஸ்தானம் 30-ஆம் தேதி வரை வழங்கி உள்ளது.

ஏழுமலையானை காலை 6 மணி முதல் 7.30 மணி வரை முக்கியப் பிரமுகா்கள் தரிசிக்கின்றனா். காலை 7.30 மணிமுதல் இரவு 9.30 மணி வரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தா்க சுவாமி தரிசனம் செய்கின்றனா். திருப்பதி மலைப்பாதை காலை 5 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் - 18004254141, 93993 99399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT