கோப்புப்படம் 
இந்தியா

இந்திய, சீன ராணுவத்தினர் நாளை 3-ஆவது முறையாக பேச்சுவார்த்தை

​இந்திய, சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இருநாட்டு ராணுவத் தளபதிகள் இடையே நாளை (செவ்வாய்க்கிழமை) 3-ஆவது முறையாக பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

DIN


இந்திய, சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இருநாட்டு ராணுவத் தளபதிகள் நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) 3-ஆவது முறையாக பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

"இந்தியா, சீனா ராணுவத் தளபதிகள் நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு 3-வது முறையாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கடந்த 2 முறை சீனாவின் மோல்டோவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த முறை இந்தியாவில் சுஷூல் பகுதியில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் எல்லையில் மோதல் போக்கைத் தவிர்க்க இருதரப்பிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்மொழிவுகளை முன்னெடுத்துச் செல்வது பிரதான நோக்கமாக இருக்கும்.  

பதற்றமான சூழலைத் தணிப்பதற்காக, விவாதத்துக்குரிய அனைத்துப் பகுதிகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது."

முன்னதாக, இருநாட்டு ராணுவத் தளபதிகள் நிலையில் ஜூன் 6 மற்றும் ஜூன் 22 ஆகிய தேதிகளில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஜூன் 22-ஆம் தேதி சுமார் 11 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் ராணுவப் படைகளை விலக்கிக் கொள்வதாக முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT