இந்தியா

அச்சம் காரணமாக கரோனாவில் இருந்த மீண்டவர்களை அழைத்துச் செல்ல மறுக்கும் உறவுகள்

DIN


ஹைதராபாத்: ஹைதராபாத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று குணமடைந்த 50-க்கும் மேற்பட்டவர்களை அவர்களது குடும்பத்தினர் அழைத்துச் செல்ல மறுப்பதால், அரசு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

காந்தி மருத்துவமனையின் கரோனா கண்காணிப்பு அதிகாரியாக இருக்கும் டாக்டர் பிரபாகர் ராவ் இது பற்றி கூறுகையில், கரோனா பாதித்து குணமடைந்த சுமார் 50க்கும் மேற்பட்டோரை அழைத்துச் செல்ல குடும்பத்தினர் மறுப்பதால், அவர்கள் அரசு மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

கரோனா பாதித்து குணமடைந்திருந்தாலும், அவர்கள் மூலமாக தங்களுக்கும் கரோனா பரவும் அபாயம் இருப்பதாக குடும்பத்தினர் அச்சம் கொண்டு குணமடைந்தவர்களையும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல மறுக்கிறார்கள். இதுபோல சுமார் 60 பேர் உள்ளனர். குடும்பத்தினரை சமாதானம் செய்ய தொடர்ந்து முயன்று வருகிறோம். தற்போது ஆண்கள், பெண்கள் என 50க்கும் மேற்பட்டோர் இயற்கை சிகிச்சை மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கரோனா பாதித்து குணமடைந்த 93 வயது மூதாட்டி மட்டும், மருத்துவமனையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார் என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

SCROLL FOR NEXT