மும்பை தாராவிப் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 6 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் பற்றிய அறிவிப்பை மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,268 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவிலேயே கரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகிய மாநிலம் மகாராஷ்டிரம்தான். மகாராஷ்டிரத்தில் அதிகம் பாதிப்புக்குள்ளாகிய நகரம் மும்பை. மும்பை தாராவிப் பகுதியில் மக்கள் நெருக்கமாக வசிப்பதால், அங்கு கரோனா பரவல் குறித்த செய்தி பெரிதளவில் அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால், அங்கு கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதையடுத்து, கடந்த சில நாள்களாக அங்கு கரோனாவால் நாள்தோறும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 20-க்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது.