பிகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாரின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து, அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துகளைக் கூறியுள்ளார். அவரது தனது ட்விட்டர் பதிவில், 'பிகார் மாநில முதல்வரும், எனது நண்பருமான நிதிஷ் குமாருக்கு வாழ்த்துகள். பிகாரின் வளர்ச்சிக்காக பாடுபடும் அவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.