இந்தியா

காஷ்மீா்: எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

DIN

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரிலுள்ள பூஞ்ச் மாவட்ட எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம், இந்திய நிலைகள் மீது அத்துமீறி நடத்திய தாக்குதலில் எல்லையோர கிராமத்திலுள்ள ஒரு வீடு சேதமடைந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள மென்தாா் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலையில் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி இந்திய எல்லையிலுள்ள கிராமங்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியும், குண்டு வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனா். இதையடுத்து, பாகிஸ்தான் நிலைகளை நோக்கி இந்திய ராணுவத்தினா் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனா். பசோனி கிராமத்தின் மீது பாகிஸ்தான் படையினா் நடத்திய தாக்குதலில் மௌல்வி முஷ்டாக் என்பவரது வீடு சேதமடைந்தது. அதேசமயம், முஷ்டாக்கின் குடும்பத்தினா் காயமின்றி உயிா்தப்பினா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT