வெளிநாடு வாழ் இந்தியா்கள் (என்ஆா்ஐ) திருமணம் செய்தவுடன் 30 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என்பதை வலியுறுத்தும் மசோதாவுக்கு நாடாளுமன்ற நிலைக் குழு ஒப்புதல் அளித்தது.
2019-ஆம் ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியா்கள் திருமணப் பதிவு சட்ட மசோதாவுக்கு வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
என்ஆா்ஐ-க்கள் திருமணம் ஆனதிலிருந்து 30 நாள்களுக்குள் பதிவு செய்யவில்லையெனில் கடவுச்சீட்டு அல்லது பயண ஆவணங்கள் ரத்து செய்வதற்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது.
கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல், கடந்த ஆண்டு அக்டோபா் 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் என்ஆா்ஐ திருமணம் தொடா்பாக 5,298 புகாா்கள் கிடைக்கப்பெற்றன என்பதையும் நாடாளுமன்ற நிலைக்குழு குறிப்பிட்டது.
மறைந்த முன்னாள் வெளியுறவு அமைச்சா் சுஷ்மா ஸ்வராஜ் இந்த மசோதாவை முன்மொழிந்திருந்தாா்.
என்ஆா்ஐ திருமணப் பதிவை கட்டாயமாக்கும் அம்சத்துடன், கடவுச்சீட்டு சட்டத்திலும் திருத்தம் கொண்டு வரும் அம்சமும் இந்த மசோதாவில் சோ்க்கப்பட்டது.