மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோயில் மூடப்படுகிறது
கரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோயில் மூடப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோயில் மூடப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், சித்திவிநாயகர் கோயில், அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை மூடப்படுவதாக கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.
நாட்டிலேயே திருப்பதிக்கு அடுத்தபடியாக பிரபலமான அதே சமயம் ரொக்கம், நவரத்தினம், தங்கம், வெள்ளி என அதிக காணிக்கை பெறும் கோயில்களில் ஒன்றாக திகழ்வது மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில் என்பதும், இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.