மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சோனியா காந்தி உடல்நிலையில் முன்னேற்றம்: விரைவில் டிஸ்சார்ஜ்
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சோனியா காந்தி விரைவில் டிஸ்சார்ஜ்
புது தில்லி : மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சோனியா காந்தி விரைவில் வீட்டுக்குத் திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியா காந்தி கடந்த மார்ச் 24, இரவு 10.30 மணியளவில் தில்லியிலுள்ள கெங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. சோனியாவுக்கு காய்ச்சல் இருப்பதாகவும் அதற்கான மருத்துவ சிகிச்சையளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் இன்று(மார்ச் 30) தெரிவித்தனர். இதனையடுத்து, அவர் விரைவில் வீட்டுக்குத் திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
summary