சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?
காங்கிரஸ் தலைவர் சோனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பாக..
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றதாக அக்கட்சியின் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் மேதாந்ததா செரிமான மற்றும் கல்லீரல் பித்தநீர் அறிவியல் நிறுவனத்தில் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது வருகை குறித்து மருத்துவமனை தரப்பிலிருந்து எவ்விதக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
Advertisement
வழக்கமான பரிசோதனை நிறைவடைந்த நிலையில் சோனியா காந்தி வீடுத் திரும்பினார்.
முன்னதாக, மார்ச் 24 அன்று, காய்ச்சல் காரணமாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் முழுவதும் பரவியிருந்த ஒருவகை தொற்றிலிருந்து குணமடைந்து, ஏழு நாள்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.