இன்று மாலை சோனியா, ராகுலைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்?
தமிழக முதல்வர் விஜய் இன்று மாலை காங்கிரஸ் தலைவர்களை சந்திப்பது பற்றி..
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று மாலை காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய தலைநகருக்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ள முதல்வர் விஜய், வியாழக்கிழமை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்.
முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, புது தில்லிக்கு அவர் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இன்று மாலை 6.30 மணிக்கு தில்லி ஜன்பத்தில் உள்ள இல்லத்தில் சோனியா, ராகுலை சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதல்வராக பதவியேற்ற பிறகு, சோனியா காந்தி, ராகுலை அவர் சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.
விஜய் தலைமையிலான அமைச்சரவையில் சமீபத்தில் இரண்டு காங்கிரஸ் எம்.பி.க்கள் சேர்க்கப்பட்டனர். இதன் மூலம், 59 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக தென்னிந்திய மாநிலத்தில் பழம்பெரும் கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிறது. 1967-ல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.
தில்லியில் இருக்கும் முதல்வர் விஜய், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamil Nadu Chief Minister C Joseph Vijay is scheduled to meet Congress Parliamentary Party chairperson Sonia Gandhi and former AICC chief Rahul Gandhi here on Wednesday evening, sources said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.