மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!
சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியது குறித்து...
காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில், சிகிச்சை முடிந்து இன்று(மார்ச் 31) வீடு திரும்பினார்.
நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்திக்கு (79) கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சர் கங்கா ராம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சீதோஷண நிலை மாற்றத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அதேநேரம், அவருக்கு தீவிர உடல் நல பாதிப்பு இல்லை என்றும் கூறப்பட்டது. தொடர்ந்து, வயிறு மற்றும் சிறுநீா்ப் பாதையில் ஏதேனும் தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
சிகிச்சையின் ஒரு பகுதியாக, அவருக்கு நுண்ணுயிர் எதிா்ப்பு மருந்துகள் (ஆன்டிபயாட்டிக்ஸ்) அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், சோனியா காந்தியின் உடல்நிலை முழுமையாக குணமடைந்த நிலையில், சர் கங்கா ராம் மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, இன்று வீடு திரும்பினார்.
மேலும், சோனியா காந்திக்கு தொடர் ஓய்வு மற்றும் வீட்டிலிருந்து சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.