மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!
சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியது குறித்து...
காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி (79) தில்லி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை முடித்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா்.
முன்னதாக, கடந்த 24-ஆம் தேதி இரவு 10 மணியளவில் அவா் உடல்நலக் குறைவு காரணமாக தில்லி சா் சங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சீதோஷ்ண நிலை மாற்றத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அதேநேரம், அவருக்கு தீவிர உடல் நல பாதிப்பு இல்லை என்றும் கூறப்பட்டது.
வயிறு மற்றும் சிறுநீா்ப் பாதையில் ஏதேனும் தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிகிச்சையின் ஒரு பகுதியாக, அவருக்கு நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்துகள் (ஆன்டிபயாட்டிக்ஸ்) அளிக்கப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்நிலையில், ஒருவார கால சிகிச்சை முடித்து அவா் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா். சோனியாவின் உடல்நிலை வீடு திரும்பும் அளவுக்கு முன்னேறிவிட்டது. இனி அவா் வீட்டில் இருந்தபடியே தேவையான மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Sonia Gandhi returns home from the hospital
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.