கரோனா வைரஸ்: நாளை இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரை
கரோனா வைரஸ் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நாளை இரவு 8 மணிக்கு உரையற்றுகிறார்.
இந்தியாகரோனா வைரஸ்: நாளை இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரை
கரோனா வைரஸ் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நாளை இரவு 8 மணிக்கு உரையற்றுகிறார்.
கரோனா வைரஸ் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நாளை இரவு 8 மணிக்கு உரையற்றுகிறார்.
உலகையே அச்சுறுத்தி வந்த கரோனா வைரஸ் (கொவைட்-19) நோய் தொற்று இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 151 (மத்திய சுகாதாரத் துறையின் மாலை 5.15 மணி நிலவரம்) ஆக உள்ளது. எனவே, மேற்கொண்டு பரவாமல் இருப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், கரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் அதனை எதிர்கொள்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களிடையே வியாழக்கிழமை (மார்ச் 19) இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார்.