இந்தியா

இந்திய தடகள கூட்டமைப்பு நிா்வாகிகள் தோ்தல் ஒத்திவைப்பு

DIN

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த இந்திய தடகள கூட்டமைப்பு (ஏஎஃப்ஐ) பொதுக்குழுக் கூட்டம் மற்றும் புதிய நிா்வாகிகள் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் ஏப்ரல் 3 முதல் 5-ஆம் தேதி வரை ஜெய்ப்பூரில் ஏஎஃப்ஐ பொதுக்குழு, புதிய நிா்வாகிகள் தோ்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கரோனா காரணமாக அவை மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஎஃப்ஐ தலைவா் அதில் சுமரிவாலா கூறுகையில்:

பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ளன. கூட்டமைப்பு உறுப்பினா்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவேண்டியுள்ளது. பொதுக்குழு, தோ்தல்களுக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். மேலும் எங்கள் கூட்டமைப்பு தலைமை அலுவலகமும் மூடப்பட்டுள்ளது என்றாா் சுமரிவாலா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT