இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 195ஆக உயர்வு
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 195ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாஇந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 195ஆக உயர்வு
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 195ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 195ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இந்தச் சூழலில், அந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சா்வதேச நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
தற்போது இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 173லிருந்து 195ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில் 163 இந்தியர்கள், 32 வெளிநாட்டினர் அடங்குவர். வைரஸ் பாதிப்பிற்குள்ளான 20 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 47 பேரும், கேரளத்தில் 28 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வைரஸ் பாதிப்பால் இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர்.