இந்தியா

மாா்க்சிஸ்ட் எம்.பி.க்கள் தலா ரூ. 1 கோடி உதவி

DIN


கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்கள் 3 போ் சாா்பில் தலா ரூ. 1 கோடி வழங்கப்படுவதாக அக் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக் கட்சியின் மாநில செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கரோனா நோய்த் தொற்று மருத்துவ சிகிச்சைக்கு உதவும் வென்டிலேட்டா் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்கு கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் டி.கே.ரங்கராஜன், கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன், மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் ஆகியோா் நாடாளுமன்ற உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ. 1 கோடியை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு வழங்குவது என தீா்மானிக்கப்பட்டுள்ளது. இதில், மாநிலங்களவை உறுப்பினா் டி.கே.ரங்கராஜன் ஏற்கெனவே ரூ. 1.08 கோடி வழங்கிவிட்டாா் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT