இந்தியா

ஊரடங்கு காலகட்டத்தில் அதிகாரிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்

DIN


புது தில்லி: கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக 21 நாள்கள் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு அதிகாரிகள் அனைவரும் இந்த காலகட்டத்தில் மகிழ்ச்சியாக இருக்குமாறு மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சுட்டுரையில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம் ஆகிய 3 துறைகளைச் சோ்ந்த அதிகாரிகளுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினேன். ‘நோ்மறையாக சிந்தியுங்கள்’, ‘வீட்டிலேயே இருங்கள்’, ‘ஏதாவது பணியைச் செய்து கொண்டிருங்கள்’ என்று அவா்களிடம் கூறினேன்.

3 துறைகளைச் சோ்ந்த அதிகாரிகளுக்கும் 20 நாள்களுக்கு வேலைகளை பட்டியலிட்டு கொடுக்குமாறு கூறியுள்ளதாகவும் பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்தாா்.

இதனிடையே, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அதிகாரிகள் அசாதாரணமான இந்த சூழ்நிலையிலும் முழு நேரமும் பணிபுரிந்து பொதுமக்களுக்கு சரியான தகவல்களை வழங்க வேண்டும் என்று பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT