பிகாரில் கரோனா பாதிப்பு 11ஆக உயர்வு
பிகாரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாபிகாரில் கரோனா பாதிப்பு 11ஆக உயர்வு
பிகாரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
பிகாரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்நோய்த்தொற்றின்
தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், நாட்டில் முன்னெப்போதும் இல்லாத இக்கட்டான சூழல் எழுந்துள்ளது.
இதையடுத்து கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிகாரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இதனை அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதேசமயம், இந்தியாவில் கரோனா வைரஸுக்கு இதுவரை 979 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 25 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.