புணேவில் மேலும் 3 பேருக்குத் தொற்று: 95 ஆனது பலி எண்ணிக்கை
புணேவில் கடந்த 12 மணி நேரத்தில் மேலும் மூன்று பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
புணேவில் கடந்த 12 மணி நேரத்தில் மேலும் மூன்று பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
புணேவில் வியாழக்கிழமை மட்டும் ஆறு பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 95 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.
சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்புப்படி, மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனாவுக்கு 10,498 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 1,773 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 459 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.