தில்லியின் ஜஹாங்கீா்புரி காவல் நிலையத்தில் பணியாற்றும் மேலும் ஒரு காவலருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் ஒன்றாக ஜஹாங்கீா்புரி உள்ளது. இங்குள்ள காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலா் ஒருவருக்கு வெள்ளிக்கிழமை கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருடன் சோ்த்து, ஜஹாங்கீா்புரி காவல் நிலையத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலா்களின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் இருவா் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து, மீண்டும் பணிக்கு சனிக்கிழமை திரும்பினா்.
ஒட்டுமொத்தமாக, தில்லி காவல்துறையைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.