முகப்பு
இந்தியா

அங்கித் சர்மா குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி: தில்லி அமைச்சரவை ஒப்புதல் 

வடகிழக்கு தில்லி வன்முறையில் கொல்லப்பட்ட புலனாய்வுத்துறை அதிகாரி அங்கித் சர்மா குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கத் தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

Updated On : 4 மே, 2020 at 3:09 PM
பகிர்:

புது தில்லி: வடகிழக்கு தில்லி வன்முறையில் கொல்லப்பட்ட புலனாய்வுத்துறை அதிகாரி அங்கித் சர்மா குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கத் தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

சமீபத்தில் நடந்த தில்லி கலவரத்தில் உயிரிழந்த ஐ.பி அதிகாரி அங்கித் சர்மா சமூக விரோதக் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கப்படுவதாக தில்லி அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அந்த முடிவுக்கு இன்று அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

கரோனா வைரஸின் நெருக்கடி காரணமாக நிதியுதவி அளிக்கும் செயல்முறை தாமதமானது. மேலும், ஒரு வாரத்தில் அவரது குடும்பத்துக்குப் பணம் கிடைத்துவிடும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இந்தியில் ட்வீட் செய்துள்ளார். 

Advertisement

ஐ.பி அதிகாரியின் உடல் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி தில்லியின் சந்த் பாக் பகுதியில் உள்ள கழிவுநீர்க் கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.