சண்டீகரில் 4 மாத குழந்தைக்கு கரோனா தொற்று உறுதி
சண்டீகரில் நான்கு மாத குழந்தை உள்பட 11 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சண்டீகரில் நான்கு மாத குழந்தை உள்பட 11 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சனிக்கிழமை நிலவரப்படி செக்டர் 26-ல் உள்ள பாபு தாம் காலணியில் புதிதாக 11 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட காலணியாகவும், பொருளாதாரத்தில் நலிந்த பகுதியாகும் இது உள்ளது.
இந்த நகரில் கடந்த மே 6-ம் தேதி இரண்டாவது நபர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பலியானார். ஆனால் அவருக்கு கரோனா இருப்பது பின்னர் தான் உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் புதிதாக இன்று 11 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
Advertisement