இந்தியா

பாகிஸ்தானில் ஒரே நாளில் 33 பேர் பலி: 1,452 பேருக்கு கரோனா தொற்று

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,452 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. 

PTI

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,452 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. 

தேசிய சுகாதார சேவைகள் அமைச்சகத்தின்படி, பஞ்சாப் மாகாணத்தில் 13,561, சிந்து 13,341, கைபர்-பக்துன்க்வா 5,252, பலூசிஸ்தான் 2,239, இஸ்லாமாபாத் 822, கில்கிட்-பால்டிஸ்தான் 482 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 91 வழக்குகள் பதிவாகியுள்ளன.

கரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 33 பேர் பலியாகியுள்ள நிலையில், பாகிஸ்தானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 770-ஐ எட்டியது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1,452 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் மொத்த பாதிப்பு 35,788 ஆக உயர்ந்துள்ளது. இதில் 9,695 பேர் இதுவரை முழுமையாகக் குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT