அலகாபாத்: மனைவி, இரண்டு குழந்தைகளை சுட்டுக்கொன்ற சிஆர்பிஎஃப் வீரர்
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் பணியாற்றி வரும் சிஆர்பிஎஃப் வீரர், தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
புது தில்லி: உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் பணியாற்றி வரும் சிஆர்பிஎஃப் வீரர், தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை சுட்டுக் கொன்ற சிஆர்பிஎஃப் வீரர் வி.கே. யாதவ் என்று தெரிய வந்துள்ளது.
சிஆர்பிஎஃப் படை வீரர்களுக்கான குடியிருப்பு வளாகத்தில் இன்று அதிகாலை இந்த சம்பவம் நேரிட்டுள்ளது.
சம்பவம்பற்றி அறிந்ததும் துணை ராணுவத்தின் மூத்த அதிகாரிகளும், காவல்துறையினரும் உடனடியாக அந்த வீரரின் வீட்டுக்கு விரைந்துள்ளனர். கொலையில் ஈடுபட்ட சிஆர்பிஎஃப் வீரர் ஒரு அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டுள்ளார்.