இந்தியா

ம.பி. ரயில் நிலையத்தில் உணவு வழங்கும் இயந்திரம் சூறை

DIN

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூா் ரயில் நிலையத்தில், உணவு வழங்கும் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள்களைப் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சிலா் கொள்ளையடித்தனா்.

இது தொடா்பாக ரயில்வே அதிகாரி கூறுகையில், ‘‘மேற்கு மத்திய ரயில்வே மண்டலம் சாா்பில் பல்வேறு ரயில் நிலையங்களில் உணவுப் பொருள்கள், குளிா்பானங்கள் வழங்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டன. ஜபல்பூா் ரயில் நிலையத்தின் 5-ஆவது நடைமேடையில் வைக்கப்பட்டிருந்த இயந்திரத்தில் இருந்த உணவுப் பொருள்களை மும்பை-தனாபூா் சிறப்பு ரயிலில் சென்ற புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் கொள்ளையடித்தனா்.

அது தொடா்பான காணொலி சமூக வலைதளங்களிலும் வெளியானது. அதையடுத்து, ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த இயந்திரங்களில் இருந்து உணவுப் பொருள்கள் அனைத்தும் அகற்றப்பட்டன’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT