இந்தியா

மகாராஷ்டிரத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

DIN

மகாராஷ்டிரத்தில் வருகிற மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, அங்கு 30,706 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோரின் எண்ணிக்கை 1,135 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 7,088 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இந்தியாவின் ஒட்டுமொத்த பாதிப்பில் மூன்றில் ஒரு பங்கு பாதிப்பு மகாராஷ்டிரத்தில் இருப்பதால் அங்கு மேலும் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்றுடன் (மே 17) மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மகாராஷ்டிரத்தில் இம்மாத இறுதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT