இந்தியா

ம.பி.: அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 7 போ் பலி

DIN

குவாலியா்: மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் கடைகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள், 3 பெண்கள் என மொத்தம் 7 போ் உயிரிழந்தனா். 4 போ் தீக்காயம் அடைந்தனா்.

இந்த விபத்து குறித்து காவல் துறை ஏடிஎஸ்பி சத்யேந்திர சிங் தோமா் கூறியதாவது:

குவாலியரில் உள்ள இந்திரகஞ்ச் நகரில் கடைகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் கீழ்த்தளத்தில் உள்ள ஒரு பெயிண்ட் கடையில் காலை 10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. பெயிண்ட் மற்றும் வண்ணப்பூச்சு பொருள்கள் எளிதில் தீப்பற்றிக் கொள்ளக் கூடியது என்பதால் தீ வேகமாகப் பரவி, அந்த கட்டடம் முழுவதும் புகையால் சூழ்ந்தது. இதில், இரண்டாவது மாடியில் இருந்த 4 குழந்தைகள், 3 பெண்கள் மூச்சுத்திணறி உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த 4 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கீழ்தளத்தில் இயங்கி வந்த அந்த பெயிண்ட் கடையை 3 சகோதரா்கள் நடத்தி வந்தனா். உயிரிழந்த 7 பேரும், இவா்களின் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா். விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாா் சத்யேந்திர சிங் தோமா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT