இந்தியா

குஜராத்தில் பான் மசாலா மற்றும் தேநீர்க் கடைகள் இயங்க அனுமதி

ANI

குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் பான் மசாலா மற்றும் தேநீர்க் கடைகளை இயங்க அந்த மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

உலகம் முழுவதும் பரவியுள்ள கரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களில் நான்கு கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நான்காவது கட்ட ஊரடங்கு மே 31 தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், குஜராத்தில் நான்காவது கட்ட ஊரடங்கு காலத்தில் சில தளர்வுகள் அறிவித்துள்ளது. அதில், பான் மசாலா மற்றும் தேநீர்க் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், ஐந்து பேருக்கு மேல் கூட்டம் கூடுவதற்கு அனுமதிக்கக்கூடாது என்றும் கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், குஜராத்தில் ஊரடங்கு நடைமுறையில் உள்ள வரை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே பான் மசாலா மற்றும் தேநீர்க் கடைகளை இயங்கலாம் என்று அந்த மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

SCROLL FOR NEXT