கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 38.73%: மத்திய அரசு
இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 38.73 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 38.73 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளதாவது:
"கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 2,350 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 39,174 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் விகிதம் 38.73 சதவீதம். குணமடைந்தோரின் விகிதம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது".
இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் 1,01,139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.