இந்தியா

சிறப்பு ரயில்களை இயக்க மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும்: பியூஷ் கோயல்

DIN


புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களை இயக்க மாநில அரசுகள் அனுமதியளித்து ஒத்துழைப்பு தர வேண்டும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

"நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்புவதற்காக 3,000-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே வெற்றிகரமாக இயக்கியுள்ளது. ரயில்வேவுக்கு ஒத்துழைப்பு தந்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்பதை மாநிலங்களுக்கு மீண்டும் வலியுறுத்துகிறேன்."

இன்று வரை புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 3,000-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில் 40 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பயணித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

டி20: இந்திய வீரர்கள் இதுவரை...

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT