கோப்புப்படம் 
இந்தியா

சிறப்பு ரயில்களை இயக்க மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும்: பியூஷ் கோயல்

​புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களை இயக்க மாநில அரசுகள் அனுமதியளித்து ஒத்துழைப்பு தர வேண்டும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

DIN


புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களை இயக்க மாநில அரசுகள் அனுமதியளித்து ஒத்துழைப்பு தர வேண்டும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

"நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்புவதற்காக 3,000-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே வெற்றிகரமாக இயக்கியுள்ளது. ரயில்வேவுக்கு ஒத்துழைப்பு தந்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்பதை மாநிலங்களுக்கு மீண்டும் வலியுறுத்துகிறேன்."

இன்று வரை புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 3,000-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில் 40 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பயணித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி விவரம்!

பிப். 14ல் வாக்குச்சாவடி ஊழியர்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

இந்தியா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை! - ரஷிய அரசு தகவல்!

எதிர்நீச்சல் -2 ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

யு19 உலகக் கோப்பை அரையிறுதி: கேப்டன் சதம் விளாசல்; ஆஸி.க்கு 278 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT