கரோனா தொற்று: உ.பி, உத்தரகண்ட் நிலவரம்
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் உத்தரகண்ட் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் புதிதாக பாதிக்கப்பட்டோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் உத்தரகண்ட் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் புதிதாக பாதிக்கப்பட்டோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரகண்ட்:
உத்தரகண்ட்டில் புதிதாக 15 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளது. இதில் 58 பேர் குணமடைந்துள்ளனர். 4 பேர் பலியாகியுள்ளனர்.
உத்தரப் பிரதேசம்:
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 273 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,606 ஆக உயர்ந்துள்ளது. 3,581 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 165 பேர் பலியாகியுள்ளனர்.