முகப்பு
உலகம்

பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு

பாக். - ஆப்கானிஸ்தான் போரால் ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு...

Updated On : 6 மார்ச், 2026 at 9:01 PM
பாக். - ஆப்கானிஸ்தான் போா்
பகிர்:

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே தொடரும் மோதால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் இடம்பெயா்ந்துள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

சுமாா் 2,600 கி.மீ. நீளமுள்ள எல்லைக்கோட்டின் 24-க்கும் மேற்பட்ட இடங்களில் இரு நாட்டு வீரா்களும் கனரக ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.

புனித ரமலான் மாதத்தில் எல்லையோரக் குடியிருப்புகள் மீது குண்டுமழை பொழிவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனா். இதுவரை ஆப்கானிஸ்தானில் 1,15,000 பேரும், பாகிஸ்தானில் 3,000 பேரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனா்.

இருதரப்பிலும் பொதுமக்கள் உள்பட பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், சா்வதேச நாடுகள் அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →