முகப்பு
இந்தியா

கேரளத்தில் ஜூன் 1-ல் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல்: வானிலை மையம்

கேரள மாநிலத்தில் வரும் ஜூன் 1-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் தென்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 மே, 2020 at 4:53 PM
பகிர்:

புது தில்லி: கேரள மாநிலத்தில் வரும் ஜூன் 1-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் தென்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மத்திய அரபிக் கடலில் மே 31ம் தேதி முதல் ஜூன் 4ம்தேதிக்குள் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதை கவனத்தில் கொள்ளும் போது, ஜூன் 1ம் தேதி கேரளத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் இருப்பதாகவே கருதப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மைய செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

அதே சமயம், கேரளத்தைத் தொடர்ந்து மாலத்தீவுகள் உள்ளிட்ட சில பகுதிகளிலும், தென்மேற்குப் பருவ மழை தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.